உடுமலையில் அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேரை பலி கொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள அரசுக்கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, தரமற்ற இந்தக் கட்டிடத்தை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், பள்ளிக் கட்டிடத்தை ஒப்பந்தக்காரர் அவசர அவசரமாக கட்டியதால், மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால், வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால், சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு இன்று (அக்.,13) விடுமுறைப்பட்டதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை நடக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...