கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியே உள்ள ஆலமரமேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சலிம் அலி பறவையியல் துறை மற்றும் இயற்கை வரலாறு மையப்பகுதி வழியாக வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் சாலைகளுக்கு வருகின்றன. இந்த நடைபாதையை பயன்படுத்தி ஆனைக்கட்டி, போளுவாம்பட்டியை இணைக்கும் சாலையை கடந்து சென்று அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்தொட்டிகளில் நீர் குடிக்கச் செல்கின்றன.
வறட்சி காலங்களில் எஸ்.ஏ.சி.ஓ.என். வளாகத்தை கடந்து அங்கு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்கங்களில் யானைகள் நீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மேலும், அந்த வழியாக யானைகள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கின்றனர்.
அண்மையில் நீர் குடிப்பதற்காக சாலைக்கு வந்த யானைகள், அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், யானைகள் சாலைகளுக்கு வராதவாறு வேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு வர யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் இரும்பு வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தவேலியை யானைகள் எளிதில் உடைத்துவிடும் என்றும், இதுமாதிரியான தடுப்புகளை அமைப்பதினால், மற்ற பகுதிகளில் யானைகள் மோதல் போக்கில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலி அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், யானைகள் செல்வதற்கான சரியான பாதையை அமைத்து வேலியை கட்டுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வறட்சி காலங்களில் எஸ்.ஏ.சி.ஓ.என். வளாகத்தை கடந்து அங்கு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்கங்களில் யானைகள் நீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மேலும், அந்த வழியாக யானைகள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கின்றனர்.
அண்மையில் நீர் குடிப்பதற்காக சாலைக்கு வந்த யானைகள், அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், யானைகள் சாலைகளுக்கு வராதவாறு வேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு வர யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் இரும்பு வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தவேலியை யானைகள் எளிதில் உடைத்துவிடும் என்றும், இதுமாதிரியான தடுப்புகளை அமைப்பதினால், மற்ற பகுதிகளில் யானைகள் மோதல் போக்கில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலி அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், யானைகள் செல்வதற்கான சரியான பாதையை அமைத்து வேலியை கட்டுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.