ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் சி.பழனிவேலு மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பி.பிரவீன்ராஜ் ஆகியோர் எழுதிய புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.
கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.