ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதிய புத்தகம் இந்திய துணை குடியரசுத் தலைவரால் வெளியீடு

ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் சி.பழனிவேலு மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பி.பிரவீன்ராஜ் ஆகியோர் எழுதிய புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 



இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.



இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...