ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதிய புத்தகம் இந்திய துணை குடியரசுத் தலைவரால் வெளியீடு

ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் சி.பழனிவேலு மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பி.பிரவீன்ராஜ் ஆகியோர் எழுதிய புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 



இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.



இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...