பரோலில் உள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும் - தமிழிசை

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இருக்கின்றது. இது சாதரண சூழ்நிலையல்ல. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என தோன்றுகின்றது. டெங்கு காய்ச்சலை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் மத்திய அரசிடம் இருந்து டெங்கினை கட்டுப்படுத்த உதவிகளை தமிழக அரசு கேட்கலாம்.  என்றார். 

மேலும், உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவது குறித்து கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இடைதரகர்களின் செயல்பாடுகள் அதிகம் இருக்கிறது.  கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தின் தேவை குறைந்து இருப்பதால் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். ஊழியர்கள் யாரும் வேலை இழக்க கூடாது என்பது தங்களின் நிலைப்பாடு.  என தமிழிசை கூறினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பரோலில் வந்திருப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படக்கூடாது. அரசியல் மாற்றம்  ஏற்படாது என்பது தனது கருத்து. சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை போலீஸார் கண்காணிக்க வேண்டும். 

கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். அதையும்மீறி பொதுமக்கள்  அச்சப்படுகின்றனர் என்றால் மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசு பரீசிலக்கும். முடிந்த வரை விளைநிலங்களில் இல்லாமல் பொதுஇடங்கள் வழியாக குழாய் கொண்டு செல்ல வலியுறுத்துவோம். 

எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி ஏற்பின்போது எதிர்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காதது குறித்து கேள்விக்கு தன் எதிர்ப்பினை நேற்றே பதிவு செய்தேன். ஆளுநர் பதவி ஏற்பில் மரபு மீறி இருக்க கூடாது. அதிகாரிகள் தெரிந்து செய்கின்றனரா ? தெரியாமல் செய்கின்றனரா என தெரியவில்லை.  கோவையில் தீவிரவாத செயல்பாடுகளில்  இருப்பவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...