பரோலில் உள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும் - தமிழிசை

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இருக்கின்றது. இது சாதரண சூழ்நிலையல்ல. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என தோன்றுகின்றது. டெங்கு காய்ச்சலை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் மத்திய அரசிடம் இருந்து டெங்கினை கட்டுப்படுத்த உதவிகளை தமிழக அரசு கேட்கலாம்.  என்றார். 

மேலும், உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவது குறித்து கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இடைதரகர்களின் செயல்பாடுகள் அதிகம் இருக்கிறது.  கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தின் தேவை குறைந்து இருப்பதால் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். ஊழியர்கள் யாரும் வேலை இழக்க கூடாது என்பது தங்களின் நிலைப்பாடு.  என தமிழிசை கூறினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பரோலில் வந்திருப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படக்கூடாது. அரசியல் மாற்றம்  ஏற்படாது என்பது தனது கருத்து. சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை போலீஸார் கண்காணிக்க வேண்டும். 

கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். அதையும்மீறி பொதுமக்கள்  அச்சப்படுகின்றனர் என்றால் மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசு பரீசிலக்கும். முடிந்த வரை விளைநிலங்களில் இல்லாமல் பொதுஇடங்கள் வழியாக குழாய் கொண்டு செல்ல வலியுறுத்துவோம். 

எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி ஏற்பின்போது எதிர்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காதது குறித்து கேள்விக்கு தன் எதிர்ப்பினை நேற்றே பதிவு செய்தேன். ஆளுநர் பதவி ஏற்பில் மரபு மீறி இருக்க கூடாது. அதிகாரிகள் தெரிந்து செய்கின்றனரா ? தெரியாமல் செய்கின்றனரா என தெரியவில்லை.  கோவையில் தீவிரவாத செயல்பாடுகளில்  இருப்பவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...