தமிழக ஆளும் அரசு மதவிரோதப் போக்கு மாறவேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

மத்திய மதவாத பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசினைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீப காலமாக தமிழக அரசு மத்திய பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக, மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மௌனம் காத்தது, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் அநீதிக்கு சாமரம் வீசியது என்று பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதை மீண்டும் உறுதிபடுத்தும் செயலாகும். முஸ்லிம்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் யோகா பயிற்சியில் ஓம் என்ற வார்த்தையை உச்சரிப்பதும், சூரியனை வணங்குவது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அனுஷ்ட்டானங்களை அனைவரும் பயிலும் பள்ளிகளில் கலப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

யோகாவில் சூரியனை வழிபடுவதும் ஒரு பயிற்சியாக உள்ளது. முஸ்லிம்கள் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ள யோகா என்ற பெயரில் சூரிய வழிபாட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இந்த இந்திய திருநாட்டில் அவரவர் தான் விரும்பும் சித்தாந்தத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக்கு எதிராக அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தரைமட்டமாக்கும் தேச விரோத செயல் ஆகும்.

எனவே, இந்த அறிவிப்பை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...