நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று (20.09.2017) தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார்.
அப்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவாது, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 15.09.2017 முதல் 02.10.2017 (காந்தி ஜெயந்தி) வரையில் நடைபெறவுள்ளது. இத்தூய்மை பணியானது ஊரக மற்றும் நகர்புற பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உதகை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவாது, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 15.09.2017 முதல் 02.10.2017 (காந்தி ஜெயந்தி) வரையில் நடைபெறவுள்ளது. இத்தூய்மை பணியானது ஊரக மற்றும் நகர்புற பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உதகை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.