பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையில் நடைபெற்று வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கோவையில், நேற்று (செப்டம்பர் 14) 7-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நாமம் இட்டு பிச்சை எடுக்கும் வகையில் வேடமிட்டும் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சமையல் செய்து உணவருந்திவிட்டு அங்கேயே தங்கியதுடன், நடனமாடி சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் ஊழியர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.


கோவையில், நேற்று (செப்டம்பர் 14) 7-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நாமம் இட்டு பிச்சை எடுக்கும் வகையில் வேடமிட்டும் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சமையல் செய்து உணவருந்திவிட்டு அங்கேயே தங்கியதுடன், நடனமாடி சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் ஊழியர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
