நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் துறையினரைக் கண்டித்து கோத்தகிரியில் இருந்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை வாகன பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.