நீலகிரியில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசுவதாக மினி லாரி ஓட்டுநர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் துறையினரைக் கண்டித்து கோத்தகிரியில் இருந்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை வாகன பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...