உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடக்கத்தின் காரணமாக பரவலாக இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.
உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை பெய்யத் துவங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, குன்னூர் பகுதிவாசி ரவி என்பவர் கூறுகையில், குன்னூருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அதிகப்படியாக காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் பருவமழை விவசாயம் செழிக்க மிகவும் அவசியமாகும். மழையின் காரணமாக விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடக்கத்தின் காரணமாக பரவலாக இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.
உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை பெய்யத் துவங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, குன்னூர் பகுதிவாசி ரவி என்பவர் கூறுகையில், குன்னூருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அதிகப்படியாக காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் பருவமழை விவசாயம் செழிக்க மிகவும் அவசியமாகும். மழையின் காரணமாக விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.