பள்ளி நிர்வாகம் நன்கொடை கேட்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி தர்ணா

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தினைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சத்யபிரியா. இவர், அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி வித்யாலயா பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



இந்நிலையில், 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வதற்காக சக்தி வித்யாலயா பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் கோரியதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பிரியா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், எனது மகள் சத்யபிரியா 5ம் வகுப்பு முதல் சக்தி வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 10ம் வகுப்பில் 449 மதிப்பெண் பெற்று மேற்குறிப்பிட்ட பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தளவிற்கு பெரிய தொகைக்கு நான் என்ன செய்வேன். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...