பள்ளி நிர்வாகம் நன்கொடை கேட்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி தர்ணா

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தினைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சத்யபிரியா. இவர், அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி வித்யாலயா பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



இந்நிலையில், 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வதற்காக சக்தி வித்யாலயா பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் கோரியதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பிரியா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், எனது மகள் சத்யபிரியா 5ம் வகுப்பு முதல் சக்தி வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது 10ம் வகுப்பில் 449 மதிப்பெண் பெற்று மேற்குறிப்பிட்ட பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தளவிற்கு பெரிய தொகைக்கு நான் என்ன செய்வேன். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...