கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒன்றாம் மலையை ஏறிக்கொண்டிருந்த புண்ணிய கோடி என்பவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலையேற்றத்தின் போது சில பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது இங்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மூச்சு திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு மரணங்கள் ஏற்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று, 28.4.2024 ஆம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டுசுமார் 12 மணிக்கு மலை ஏற துவங்கினர்.

அப்போது, ஒன்றாவது மலையில்,திடீரென புண்ணிய கோடி என்பவர் தனக்குவயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி வாந்தி எடுத்து உள்ளார். உடன் இருந்தவர்கள், உடனே அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், திருப்பூர் மற்றும் சேலத்தை சேர்ந்த பக்தர்கள் இருவர் மலை ஏற்றத்தின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு, அரசு உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...