கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒன்றாம் மலையை ஏறிக்கொண்டிருந்த புண்ணிய கோடி என்பவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலையேற்றத்தின் போது சில பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது இங்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மூச்சு திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு மரணங்கள் ஏற்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று, 28.4.2024 ஆம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டுசுமார் 12 மணிக்கு மலை ஏற துவங்கினர்.

அப்போது, ஒன்றாவது மலையில்,திடீரென புண்ணிய கோடி என்பவர் தனக்குவயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி வாந்தி எடுத்து உள்ளார். உடன் இருந்தவர்கள், உடனே அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், திருப்பூர் மற்றும் சேலத்தை சேர்ந்த பக்தர்கள் இருவர் மலை ஏற்றத்தின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு, அரசு உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...