தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் என்பவர், சளி தொந்தரவு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வியாழக்கிழமை வீடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் செவிலியர்களுக்கு தகவல் அளித்தும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும், மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், வந்த மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்ததாகவும், மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், மூச்சு தினறல் ஏற்பட்டது குறித்து தகவல் அளித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்களோ செவிலியர்களோ யாரும் வந்து பார்க்க வில்லை. பின்னர் வந்த மருத்துவர்களும் நோயாளிக்கு ஆக்சிஜன் கூட வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, அவரது உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவ நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து மருத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...