தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் என்பவர், சளி தொந்தரவு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வியாழக்கிழமை வீடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் செவிலியர்களுக்கு தகவல் அளித்தும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும், மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், வந்த மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்ததாகவும், மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், மூச்சு தினறல் ஏற்பட்டது குறித்து தகவல் அளித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்களோ செவிலியர்களோ யாரும் வந்து பார்க்க வில்லை. பின்னர் வந்த மருத்துவர்களும் நோயாளிக்கு ஆக்சிஜன் கூட வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, அவரது உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவ நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து மருத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...