கோவை பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சஜித் (40). இவர் கடந்த 18ஆம் தேதி கேரளா சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சஜித் (40). இவர் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி சஜித், தனது வீட்டை பூட்டி, சாவியை தன தந்தையிடம் கொடுத்துவிட்டு, சொந்த ஊரான கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சஜித்தின் தந்தை சுரேந்தர் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்த அவர் உடனடியாக தனது மகன் சஜித்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பிரோவை உடைத்து அதில் இருந்த ஏழு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சஜித் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...