இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை : தி இந்து நாளிதழின் செய்தியாளர் சவுந்தர்ய ப்ரீத்தா பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இரண்டாவது நிகழ்வாக இன்று பயிற்சிப் பட்டறை துவங்கியது.  இந்த நிக்ழவில் "தி இந்து" நாளிதழின் செய்தியாளர் சவுந்தரிய ப்ரீதா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.  'ஊடகவியலாளர் நெறிமுறைகள் மற்றும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:- 



இன்றைய காலகட்டத்தில் பலர் தொழில்துறை சார்ந்த செய்திகளை படிப்பதில்லை. ஊடகவியலாளர்களிடையேயும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பில் சில தயக்கம் தெரிகிறது. கோவை மாநகரம் முழுக்க முழுக்க தொழில் துறை சார்ந்த நகரம். இத்துறை சார்பில் செய்தியாளர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது மாவட்டத்தில் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும். 

தொழில் துறை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுடைய பிரச்சனைகளினூடே அச்செய்தியை கொடுக்க வேண்டும். அதோடு, சாதக மற்றும் பாதகங்களையும் மிக எளிமையான நடையில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.



தற்போது, கோவையில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவனமும், புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் தங்கள் பங்குகளை முதலீடு செய்கிறார்கள். இது தவிர பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கோவையில் தொடங்கபட்டு வருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பை பெருகின்றனர். எனவே, இது முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த செய்திக்களமாக உள்ளது. இளம் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு முறையை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது, மூத்த பத்திரிக்கையாளர் அல்லது வல்லுனர்கள் அலோசனைகளை கேட்டறிந்து செய்தி சேகரித்தால் உள்ளூர் செய்தி ஒன்றையும் தேசிய செய்தியாக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் செயலாளர் ஷாதிக் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...