தற்போதைய தமிழக முதலமைச்சர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக முதலமைச்சர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் அவர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் ஷ்வச் மாரத்தான் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 1500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஹோப்காலேஜ், சிட்ரா உல்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அங்கு வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கவர்னர் பொறுமையாக ஆழமாக யோசித்து முடிவை அறிவித்திருக்கிறாரெனவும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதா என நாளைக்குதான் தெரியும் என கூறினார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் நாளைக்கு அவர் பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது என கூறிய அவர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை இரண்டு கழகங்களும் ஆண்டு அழித்து விட்டது எனவும், கழக அரசுகளால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் கூறினார்.

இங்கு அதிகார போட்டி நடைபெற்றுவருவதாக கூறிய பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முடிந்து விட்டன எனவும், நேர்மையான வளர்ச்சி தரக்கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற புதிய தேடல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...