மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையிலான ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ மாரத்தான் : ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 



கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களான சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், டிரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி தொண்டு நிறுவனம் இணைந்து ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த மாரத்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகர (போக்குவரத்து) ஆணையர் சுஜித்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில் பொதுப் போட்டியாளர்களுடன் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் என சுமார் 12,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கி.மீ., தூரமும், 6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 கி.மீ., தூரமும் நடத்தப்பட்டது. இதேபோல, பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும், ஆண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் மூலம் திரட்டப்படும் வருவாய் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.



மாரத்தானில் கலந்துகொண்ட வீரர்களுக்கு டி-சர்ட், பதக்கம், சான்றிதழ், காலை உணவு மற்றும் புத்துணர்ச்சி பானம் ஆகியவை வழங்கப்பட்டது. 

Newsletter