உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் - கேஜி மருத்துவமனை ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் கேஜி மருத்துவமனை சார்பில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.



கோவை: உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் கேஜி மருத்துவமனை சார்பில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்போது மாறிவரும் நடைமுறைகளால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாக உள்ள நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் நடைபெற்றது.



உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இதில், ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பாக துவங்கிய இந்த பேரணியை மருத்துவர் பக்தவத்சலம் துவக்கி வைத்தார்.

மாறி வரும் உணவு பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருவதாகவும், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல், மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்,. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிவதாக அவர் கூறினார்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ,உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் பக்தவத்சலம் தெரிவித்தார்.

Newsletter