நடுவரிடம் இருந்து பந்தை வாங்கிய தோனி ஓய்வா...? : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரவிசாஸ்திரி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி நடுத்தரமான (2-வது போட்டியில் 37(59), கடைசி ஆட்டத்தில் 42(66)) ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.

லீட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வீரர்கள் பெவிலியன் திரும்பிய போது தோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



பொதுவாகப் போட்டி தொடரை வென்றாலோ..? சிறப்பாக பந்து வீசினாலோ..? அல்லது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள். இதேபோலத் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டெம்பை எடுத்து வந்த தோனி, சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது ஓய்வை திடீரென அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் தோனி பந்தை வாங்கி சென்றதால், அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ..? என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், தோனிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தோனி ஓய்வு குறித்து வெளியான பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- எம்.எஸ். தோனி, எங்கும் போகவில்லை. மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளம் பற்றி பொதுவான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்தைக் காட்ட விரும்பினார். எனவே, நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கிச்சென்றார். இவ்வாறு அவர் கூறியிருந்தார். ரவிசாஸ்திரியின் விளக்கத்தால், சில தினங்களாக பதறிப்போய் இருந்த தோனி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சை விட்டுள்ளனர். 

37 வயதான டோனி 2014–ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி நடுத்தரமான (2-வது போட்டியில் 37(59), கடைசி ஆட்டத்தில் 42(66)) ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.

லீட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வீரர்கள் பெவிலியன் திரும்பிய போது தோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகப் போட்டி தொடரை வென்றாலோ..? சிறப்பாக பந்து வீசினாலோ..? அல்லது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள். இதேபோலத் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டெம்பை எடுத்து வந்த தோனி, சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது ஓய்வை திடீரென அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் தோனி பந்தை வாங்கி சென்றதால், அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ..? என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், தோனிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தோனி ஓய்வு குறித்து வெளியான பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- எம்.எஸ். தோனி, எங்கும் போகவில்லை. மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளம் பற்றி பொதுவான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்தைக் காட்ட விரும்பினார். எனவே, நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கிச்சென்றார். இவ்வாறு அவர் கூறியிருந்தார். ரவிசாஸ்திரியின் விளக்கத்தால், சில தினங்களாக பதறிப்போய் இருந்த தோனி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சை விட்டுள்ளனர். 

37 வயதான டோனி 2014–ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 

Newsletter