காமன்வெல்த்: ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார்.

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று. இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியா பல பதக்கங்களைக் குவித்து வருகிறது.

அதன்படி, காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசியாவின் லீ சாங் வெய்யை எதிர் கொண்டார்.

இதில் 21-19, 14-21, 14-21 என்ற செட்களில் லீ சாக் வெய்யிடம் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இது காமன்வெல்த் போட்டிகளில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெரும் முதல் பதக்கமாகும். மேலும், உலக தர வரிசையில் ஸ்ரீகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

Newsletter