ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரகானே நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியும் என ஸ்மித் ஒப்புக் கொண்டார். இதனால், உடனடியாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்தார். இதனால், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தப் பிரச்சினை பூதாகரமாக எழுந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஸ்மித் இடம்பெறுவாரா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐசிசி வழங்கும் தண்டனைக்குப்பின்தான் முடிவு செய்வோம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, களம் காணும் ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த அணியின் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Newsletter