மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான முதல் இந்திய வீரர் புஜாரா

செஞ்சூரியன் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆகி புஜாரா மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஜனவரி 17

செஞ்சூரியன் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆகி புஜாரா மோசமான சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 335 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில், 3-வது வீரராக புஜாரா களம் இறங்கினார். அடுத்த பந்தை மிட்-ஆன் நோக்கி அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். மிட்-ஆன் திசையில் பீல்டிங் செய்த நிகிடி ஸ்டம்பை குறிபார்த்துச் சரியாக எறிந்தார். இதனால் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா, பார்தீவ் பட்டேல் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 27-வது ஓவரின் முதல் பந்தை பார்தீவ் பட்டேல் பவுண்டரி லைனை நோக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே சென்ற பந்தை நிகிடி தடுத்துவிட்டார். பின்னால் சென்ற டிவில்லியர்ஸ் பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வேகமாக வீசினார்.

அதேவேளையில், புஜாரா 3-வது ரன்னுக்கு ஓடும்போது விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ரன்அவுட் செய்தார். இதனால் புஜாரா 19 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆன முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை புஜாரா பதிவு செய்துள்ளார்

Newsletter