இலங்கை அணியின் புதிய கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்

நவம்பர் 29

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவருக்கான இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டுவென்டி, டுவென்டிப் போட்டித் தொடர் நடக்கிறது. டிசம்பர் 10, 13 மற்றும் 17-ந் தேதிகளில் ஒருநாள் போட்டியும், டிசம்பர் 20, 22 மற்றும் 24-ந் தேதிகளில் இருபது ஓவர் போட்டியும் நடக்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 20 ஓவருக்கு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவருக்கான இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கை அணியின் கேப்டனாக உபுல் தரங்கா செயல்பட்டார். அவரது தலைமையில் இலங்கை அணி இந்தியா, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடிய மூன்று தொடர்களையும் இழந்தது. 2017-ம் ஆண்டில் இலங்கை அணி ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter