ஏஎஸ்ஐஎஸ்சி தேசிய அளவிலான வாலிபால் போட்டி- நான்காவது முறையாக கோப்பை வென்றது கோத்தகிரி செய்ன்ட் ஜூடு அணி

ஏஎஸ்ஐஎஸ்சி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 11 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணியும் என மொத்தம் 280 வீரர்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற செய்ன்ட் ஜூடுஸ் ஆண்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. செய்ன்ட் ஜூடுஸ் பெண்கள் அணி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

நீலகிரியில் 1500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற இதன் பரிசளிப்பு விழாவில் ஜிஓஐ முன்னாள் செயலாளர் சுதிர் கே.சௌதாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானார் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர் சுதிர் கே. சௌதாரி பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.

Newsletter