கோவையில் வரும் 23ம் தேதி முதல்நிலை தகுதித்தேர்வு தடகள போட்டிகள் - 2,000 மாணவர்கள் பங்கேற்பு

இந்தியன் ஸ்பீட் ஸ்டார் 3-வது சீசன், மத்திய பெட்ரோலிய துறையின் கெயில் இந்தியா பங்களிப்புடன் தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்பு இணைந்து நடத்தும் மாவட்ட வாரியான முதல்நிலை தகுதித்தேர்வு தடகள போட்டிகள் வரும் 23-ம் தேதி நடக்கிறது. 

இது தொடர்பாக, கோவை பத்திரிக்கையாளர் கூட்டரங்கில் இன்று (அக்.,07) செய்தியாளர்களை சந்தித்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில்,  இந்தியா முழுவதும் சிறந்த வீரர்களை கண்டறியும் விதமாக போட்டிகள் நடத்தபட்டு வருகிறது. நாடு முழுவதும் 115 இடங்களில் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் முதல்கட்ட போட்டிகள் நடைபெற உள்ள நிலையில். வரும் 23ம் தேதி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 2,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். 

மேலும், 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் என இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். 100மீ, 200மீ, 400மீ என மூன்று விதமான போட்டிகள் நடத்தப்பட்டு குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கபட்ட தூரத்தை கடக்கும் வீரர்கள் தேர்வு செய்யபட்டு மாநில அலவிலான போட்டியில் பங்கேற்பார்கள். இதில், சிறந்து விளங்குபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். 

சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் இந்தியாவின் பங்கு மிக குறைவாக உள்ளது. இது மாதிரியான தகுதித்தேர்வுகள் மூலம் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  இரண்டாவது சீசனில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 547 பேர் தேர்வு செய்யபட்டனர். இதில், 6 பேர் தேசிய அளவில் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter