இத்தாலியில் நடைபெற்ற பாஸ் ஜி.பி.கார் பந்தயத்தில் போட்டியில் தமிழக வீரர் மஹாவீர் ரகுநாதன் யூரோப்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலியில் நடைபெற்ற பாஸ் ஜி.பி.கார் பந்தயத்தில் போட்டியில் தமிழக வீரர் மஹாவீர் ரகுநாதன் யூரோப்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இத்தாலி நாட்டில் இமோலாவில் நடைபெற்ற யுரோப்பியன் கார் பந்தயத்தில் சென்னை வீரர் மஹாவீர் ரகுநாதன் சாம்பியன் பட்டம் பெற்று இதை வெல்லும் முதல் இந்தியர் என பெருமையை பெற்றார். 2012ல் ஆசிய ஜே.கே கார் பந்தயங்களில் பங்கேற்ற மஹாவீர் ரகுநாதன் 2013ம் ஆண்டு எம்.ஆர்.எப் பார்முலா சேலஞ் ஓட்டியவர் சீனாவில் நடைபெற்ற பார்முலா மாஸ்ட்ர்ஸ் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். தற்போது இத்தாலியில் நடைபெற்ற பாஸ் ஜி.பி.கார் பந்தயத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்ற கார் பந்தயத்தில் 19 வயதான சென்னை வீரர் மஹாவீர் ரகுநாதன் 7 போட்டிகளில் 263 புள்ளிகள் பெற்று இந்த சாதனையை பெற்றார். இதற்கு முன் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் 1994ம் ஆண்டு பிரிட்டிஷ் பார்முலா போர்டு பந்தயத்திலும் பார்முலா ஆசிய சீரியஸ் போட்டியில் 1996ம் ஆண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து இந்திய வீரர் கருண் சந்தோக் பார்முலா கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டியின் இரண்டாவது போட்டியில் மஹாவீர் ரகுநாதனுடன் ஓட்டிய இத்தாலி வீரர் செல்வட்டாரோ டி பிளானோ நான்காவது சுற்றில் வெளியேறியதை அடுத்து அவர் 243 புள்ளிகளுடன் ஆஸ்திரிய வீரர் ஜொஹேனன் லெஹர்மேர் 247 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.

சாம்பியன்ஷிப் வெற்றி குறித்து மஹாவீர் ரகுநாதன் கூறுகையில் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னுடை தன்னம்பிக்கையை மேலும் ஊக்கபடுத்துவதாக தெரிவித்தவர் தனக்கு ஆதரவளித்த பி.எஸ் ரேசிங் அணிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter