சீனாவில் நடக்கும் முதியவர்களுக்கான தடகளப் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

முதியவர்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டோர்) 20-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி சீனாவின் ஜியாங்சூ ருஹோ ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில், வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.  à®‡à®¤à®¿à®²à¯, இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த 8 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 

இந்த தடகளப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஜுவல் ஒன் (Jewel One) மற்றும் எமரால்ட் குழுமமும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன. மேலும், போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகக்ளையும் கூறியுள்ளனர். 

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக, கோவை மாவட்ட மாஸ்டர் தடகளச் சங்கத்தினருடன் இணைந்து, தமிழகத்தை சேர்ந்த 8 வீரர், வீராங்கனைகள் இன்று (22.09.2017) சீன செல்கின்றனர். 

20-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் விபரம் பின்வருமாறு :

வீரர்கள் :-

1) ஏ. ராமசாமி - (வயது 55)

2) ஏ.வேலுசாமி - (வயது 75)

3) ஜி.எம். கருணாகரன் - (வயது 75)

வீராங்கனைகள் :-

1) குகலூர் பழனிசுவாமி சாந்தி - (வயது 50)

2) பாட்ரிகா தன்னேர் - (வயது 65)

3) சிவகாமி பாலசுந்தரம் - (வயது 70)

4) கே. லட்சுமி - (வயது 70)

5) வசந்தா சாமுவேல் - (வயது 80)

Newsletter