ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி



கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற  à®‡à®¨à¯à®¤ போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  à®ªà¯‡à®Ÿà¯à®Ÿà®¿à®™à¯à®•ை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரகானே (55), விராட் கோலி (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 253  à®°à®©à¯à®•ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்தால் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர்கள் கார்ட்ரைட், வார்னர் தலா ஒரு ரன்னில்

புவனேஸ்வர் குமார் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

அடுத்து கேப்டன் ஸ்மித் உடன் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஹெட் 39 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 14 ரன்னில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. குல்தீப் யாதவ் , வடே (2), ஆஷ்டோன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆல்ரவுண்டர் ஸ்டோயினிஸ்  à®‡à®¨à¯à®¤à®¿à®¯ பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இறுதியில், அவர் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிக்ள கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Newsletter