7-வது காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் கோவை இளைஞர்கள் சாதனை


7-வது காமன்வெல்த் ஆண்கள் மற்றும் பெண்கள் பளுதூக்கும் சேம்பியன்ஸ்சிப் 2017 போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வேல்ஸ், ஸ்காட்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, வடக்கு ஐஸ்லேண்ட், நமிபியா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 72 வீரர்களில் கோவையைச் சேர்ந்த 6 வீரர்கள் உட்பட தமிழகத்தைச் சேரந்த 9 வீரர்கள் பங்கேற்றனர்.



இவர்களுக்கான சோதனைப் போட்டி ஜாம்செத்பூரிலும், ஊக்கமருந்து பரிசோதனை தில்லியிலும் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 7-வது காமன்வெல்த் போட்டியில், 6 வீரர்கள் தங்கப் பதக்கமும், இருவர் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.



வெற்றிபெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-

1. சீனியர் 59 கிலோ எடைப்பிரிவில் விக்னேஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

2. ஜூனியர் 66 கிலோ எடைப்பிரிவில் இளங்கோ வெள்ளிப் பதக்கம் வென்றார்.

3. ஜூனியர் 74 கிலோ எடைப்பிரிவில் பாரத் பழனிசாமி தங்கப் பதக்கம் வென்றார்.

4. ஜூனியர் 83 கிலோ எடைப்பிரிவில் மணிகண்டன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

5. ஜூனியர் 93 கிலோ எடைப்பிரிவில் வெங்கடேஷ் தங்க பதக்கம் வென்றார்.

6. ஜூனியர் 105 கிலோ எடைப்பிரிவில் ரவி சங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

7. சப் ஜூனியர் 66 கிலோ எடைப்பிரிவில் மாதேஷ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.

8. சப் ஜூனியர் 47 கிலோ எடைப்பிரிவில் நிவேதா தங்கப் பதக்கம் வென்றார்.

9. மாஸ்டர் கேட்டகிரி 74 எடைப்பிரிவில் ராமகிருஷ்ணன் தங்கப் பதக்கம் வென்றார்.

Newsletter