உலகளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள கோவை மாணவி

தேசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி கடந்த ஜனவரி மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில், கோவை மாவட்டம், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி ஐடி படித்து வரும் வீராங்கனை எம்.ஏ.சிவ அன்பரசி வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

இந்த சாதனையின் மூலம் உலக அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் சீனாவின் தைபே நகரில் ஆகஸ்ட் 18 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் இருந்து உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை எம்.ஏ.சிவ அன்பரசி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter