இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஐ.பி.எல் போட்டிகள்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.

இதையடுத்து. சோனி நிறுவனத்திற்கான ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தம் கடந்த சீசனோடு முடிவடைந்தது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் இன்று (செப்.4) நடைபெற்றது. 

மும்பையில் பிசிசிஐ நடத்திய இந்த ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. 

2018 முதல் 2022 வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐ.பி.எல். ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.

முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஏலம் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

Newsletter