கோவையில் கார் பந்தயம்- பார்வையாளர்களைக் கவர்ந்த இளம் வீரர்கள்

கோவையில் நடைபெற்ற கார் பந்தைய போட்டிகளில் முன்னணி வீரர்கள் முன்னிலையை இழந்தாலும், இளம் வீரர்கள் முன்னணி இடத்திற்கு முன்னேறியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டர் ஸ்பீடு வே கார் பந்தைய மைதானத்தில் இவ்வாண்டிற்காக கடைசி சீசன் கார் பந்தய போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. யூரோ ஜே.கே.17 போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான விஷ்ணு பிரசாத் இரண்டாம் இடத்திற்கும், ரிக்கி கப்போ மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்ட போதும் சிறப்பாக காரை இயக்கிய அனிந்தித் ரெட்டி முதலிடத்தை பிடித்தார்.



இரண்டாம் சுற்றில் விஷ்ணு பிரசாத், அனிந்தித் ரெட்டி, ஆகாஷ் கவுடா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் அனிந்தித் ரெட்டி முதலிடத்தில் உள்ளதால் விஷ்ணு பிரசாத் அடுத்த சுற்றில் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

எல்.ஜி.பி பார்முலா 4 பந்தையத்தின் முதல் சுற்றில் திலிஜித், ராகுல் ரங்கசாமி, சந்தீப் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், இரண்டாவது சுற்றில் திலிஜித், சந்தீப் குமார், ராகுல் ரங்கசாமி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பிடித்து அசத்தினர்.



ஜிக்சர் கோப்பை இரு சக்கர வாகன போட்டியில் மிசோரம் வீரர் மல்சாவ் டாங்கிலியானா முதலிடத்தையும், சச்சின் சவுத்திரி, ஜோசப் மேத்யூ ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.

ரெட் புல் ரூக்கி போட்டியில் இலங்கையின் ஜேசன் குணவர்தனே, லால்னுன்சங்கா, ஸ்பெயினின் லால்ஹுருஜீலா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். இந்த தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.



முன்னதாக, கோவையில் இரு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு தோல்வி முகம் ஏற்பட்ட போதும் இளம் வீரர்கள் வெற்றியை ஈட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter