இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா மாருதி விளையாட்டு கல்லூரி சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா மாருதி விளையாட்டு கல்லூரி சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையே வாலிபால் போட்டி இக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 16 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், இறுதியில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்று சாம்பியன் கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசோலையினைப் பெற்றது.



இரண்டாம் இடத்தினை கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வென்று கோப்பை மற்றும் 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வெற்றது. தொடர்ந்து, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மூன்றாம் இடத்தினைப் பிடித்து கோப்பை மற்றும் 5 ஆயிரம் ரூபாயிக்கான காசோலையினை வென்றது. நான்காம் இடத்தினை இப்போட்டியினை நடத்திய மாருதி விளையாட்டுக் கல்லூரி வென்று கோப்பை மற்றும் ரூபாய் மூன்றாயிரம் பெற்றது.



இதனைத்தொடர்ந்து, வெற்றிபெற்ற அணிகளுக்கு இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயாவின் கல்வி நிறுவனங்களின் செயலர் கரிஸ்தானந்தா, செயலர் மற்றும் முதல்வர் சாய்குமார், அக்வா குரூப் நிறுவனங்களின் தொழில் நுட்பம் மற்றும் நிதித்துறையின் துணைத் தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கோப்பை மற்றும் காசோலைகளை வழங்கினர்.

Newsletter