கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி

சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி கொல்லத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது.

இக்கோப்பையை வென்ற ரயில்வே பாதுகாப்புப் படை அணியினர் சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா-வைச் சந்தித்து கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுடன் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் பி.சிவதாஸ் மற்றும் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்புப் பொறியாளர் பெருமாள் நந்தலால் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter