மாநில அளவிலான வாலிபால் போட்டி - இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றது கோவை கற்பகம் பல்கலைக்கழகம்

தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இந்தப் போட்டியின் இறுதியில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கற்பகம் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பிடித்தது.



கோவை: மாநில அளவிலான மாபெரும் வாலிபால் போட்டில் இரண்டாம் இடம் பிடித்து திரும்பிய கற்பகம் பல்கலைக்கழக அணியினருக்கு பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 18 முதல் 20ஆம் தேதி வரை மாநில அளவிலான மாபெரும் வாலிபால் போட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டன. முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும், பெரியார் பல்கலை அணியும் எதிர்கொண்டது.

இதில் 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி, திருவாரூர் அணியை எதிர்கொண்டது. இதில் 2-0 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும், சாய் மயிலாடுதுறை பல்கலைக்கழக அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக முதன்மை கல்வி இயக்குனர் முருகையா, துணை வேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter