கோவையில் உலக புகையிலை எதிர்ப்பு தின மாரத்தான் போட்டி - ஆட்சியர் துவங்கி வைத்தார்!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோவை: உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் புகையிலை பயன்பாடு, புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் புகையிலை எதிர்ப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பொது சுகாதார துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. 



இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கொடியசைத்து துவங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியானது வ.உ.சி மைதானத்தில் தொடங்கி அவிநாசி சாலை ரேஸ்கோர்ஸ் வழியாக மீண்டும் வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் TV. குமார், புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு.M. சரண்யாதேவி, சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் மற்றும் SPOT WORLD WIDE COMPANY FOUNDE & CEO M. NIZAR ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter