கோவா ஐ.எப்.சி.ஆர். கிரிக்கெட் போட்டி - கோவை அணி பங்கேற்பு

கோவாவில் நடைபெறவுள்ள ஐஎப்சிஆர் (சர்வதேச கிரிக்கெட் விரும்பும் ரோட்டரியன் பெலோஷிப்) கிரிக்கெட் போட்டியில் கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் 12 பேர் கொண்ட அணி பங்கேற்கவுள்ளது.


கோவை: கோவாவில் வரும் பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை ஐஎப்சிஆர் (சர்வதேச கிரிக்கெட் விரும்பும் ரோட்டரியன் பெலோஷிப்) கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதிலுமிருந்து 16 அணிகள் பங்கேற்கின்றன. அகில இந்திய அளவிலான இந்த பெலோஷிப் போட்டியை முதல் முறையாக கோவா ரோட்டரி மாவட்டம் 3170 நடத்துகிறது.

சென்னை, மும்பை, டில்லி, ஹசன், ஹூப்ளி, சேலம், நாசிக், கொல்கத்தா, மற்றும் பெங்களுருவை சேர்ந்த அணிகள் போட்டியில் களம்காணவுள்ளன. 3 ஆண்டு இடைவெளிக்குபின் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ரோட்டரியன் பங்கேற்கின்றனர். கோவையின் அணிக்கு சுமித்குமார் பிரசாத் தலைமை ஏற்கிறார்.



கோவை ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரியன் பிரபாகர், ரோட்டரியன் வசந்த், ரோட்டரியன் ஸ்ரீனிவாசன், ரோட்டரியன் மணிகண்டன், ரோட்டரியன் எம்.எம். ராஜா, ரோட்டரியன் ஜெயராஜ், ரோட்டரியன் தனபால், ரோட்டரியன் கண்ணன், ரோட்டரியன் மார்க், ரோட்டரியன் மதன் மற்றும் ரோட்டரியன் சைலேஷ் ஆகியோர் அணியில் பங்கேற்கின்றனர். இந்த அணி நாளை கோவையிலிருந்து கோவாவுக்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter