கோவையில் நாளை முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் கோவையில் நாளை முதல் தனித்தனியாகப் போட்டிகள் நாளை முதல் நடத்தப்பட உள்ளன.


கோவை: கோவையில் நாளை முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான இந்த விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி, மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில் 42 வகையான மாவட்ட அளவிலான போட்டிகளும், 8 வகையான மண்டல அலுவலக போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் நாளை துவங்குகின்றன. கற்பகம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியும், பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியும் நடைபெறுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் புகைப்படத்துடன் கூடிய Bonafide சான்றிதழ், இணையதள பதிவு நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter