பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஆடவர் மற்றும் பெண்களுக்கான சதுரங்க போட்டி தொடக்கம்

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஆடவர் மற்றும் பெண்களுக்கான சதுரங்க போட்டி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தொடங்கியுள்ளது. இதில் 27 மாநிலங்களைச் சேர்ந்த 35 அணிகள் பங்கேற்பு.


கோவை: தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அளவிலான சதுரங்க போட்டி பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.



தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அணிகளுக்கு இடையேயான ஆடவர் மற்றும் பெண்களுக்கான சதுரங்க போட்டி பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் வருகிற 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பீகார் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வீரர் பங்கு பெறும் 37 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.



இந்த சதுரங்கப் போட்டியை தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு சங்க தலைவர் மாணிக்கம் மற்றும் அகில இந்திய சதுரங்க விளையாட்டு சங்கத்தின் முன்னாள் செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.



இந்தப் போட்டியில் கலந்து கொண்ட சதுரங்க வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நேர்த்தியாகச் சதுரங்க காய்களை நகர்த்தி விளையாடி வருகின்றனர்.



இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter