கோவையில் தேசிய அளவிலான ஜூனியர் பெண்களுக்கான வூசு போட்டி - மாணவிகள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் பெண்களுக்கான வூசு (wushu) போட்டியில் அதிரடி காட்டி அசத்திய மாணவிகளுக்கு ரொக்க பரிசு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.



கோவை: கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு(wushu) போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.



கோவையில் இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு (wushu) சங்கம், மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வூசு (wushu) போட்டிகள் நடைபெற்றது.



இதில், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.



சான்சூ, டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.



இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter