சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்: கோவையில் 11-இடங்களில் விளம்பர பேனர்கள்‌ வைப்பு..!

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌, அனைத்து மண்டல அலுவலகங்கள்‌, வ.உ.சி.பூங்கா, காந்திபுரம்‌ மத்திய பேருந்து நிலையம்‌, டவுன்ஹால்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌, ரேஸ்கோர்ஸ்‌ உள்ளிட்ட 11 இடங்களில்‌ செஸ்‌ ஒலிம்பியாட்‌ -2022 போட்டிகள்‌ நடைபெறுவது குறித்த விளம்பர பேனர்கள்‌ வைக்கப்பட்டுள்ளது.


கோவை: 44-வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ 2022-போட்டியானது தமிழகத்தில்‌ உள்ள மாமல்லபுரத்தில்‌ எதிர்வரும்‌ ஜூலை 28 ஆம்‌ தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 10 ஆம்‌ தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



இந்திய வரலாற்றிலேயே முதல்‌ முறையாக சர்வதேச அளவில்‌ 186-நாடுகளைச்‌ சேர்ந்த 2000-க்கும்‌ மேற்பட்ட செஸ்‌ விளையாட்டு வீரர்கள்‌, வீராங்கனைகள்‌ பங்கேற்கவுள்ள 44 வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ 2022 போட்டியானது தமிழகத்தில்‌ உள்ள மாமல்லபுரத்தில்‌ எதிர்வரும்‌ ஜூலை 28 ஆம்‌ தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 10 ஆம்‌ தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்‌ ஒருபகுதியாகக் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சார்பில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌, அனைத்து மண்டல அலுவலகங்கள்‌, வ.உ.சி.பூங்கா, காந்திபுரம்‌ மத்திய பேருந்து நிலையம்‌, டவுன்ஹால்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌, ரேஸ்கோர்ஸ்‌ உள்ளிட்ட 11 இடங்களில்‌ செஸ்‌ ஒலிம்பியாட்‌ -2022 போட்டிகள்‌ நடைபெறுவது குறித்த விளம்பர பேனர்கள்‌ வைக்கப்பட்டுள்ளது.

Newsletter