தென்னிந்திய அளவிலான கபடி போட்டி - கற்பகம் பல்கலைக்கழகம் மூன்றாம் இடம்!

கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.


கோவை: கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கோகுலம் சார்பாக கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் ப்ரீ காலிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் அணி கொக்குளம் அணியை எதிர்கொண்டு 35-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நடந்த காலிறுதிப் போட்டியில் கன்னியாகுமரி அணியை எதிர்கொண்டு 37 க்கு 18 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை அணி தூத்துக்குடி அணியை எதிர்கொண்டு 32-35 என்ற புள்ளி அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் பழனிசாமி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter