மாநில அளவிலான கபடி போட்டி: கோவை கற்பகம் பல்கலை முதலிடம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாடிப்பட்டியில் பிப்ரவரி மாதம் 5 முதல் 6 வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கற்பகம் பல்கலை முதலிடம் பெற்றது.


கோவை: மாநில அளவிலான கபடி போட்டியில் கோவை கற்பகம் பல்கலை முதலிடம் பெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 5 முதல் 6 வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாடிப்பட்டியில் நடைபெற்றது.

இப்போட்டி 70 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 70க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு கொண்டன. இப்போட்டியின் காலிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை மற்றும் ஆண்ட குலம் ஸ்போர்ட்ஸ் கிளப் தஞ்சாவூர் அணிகள் விளையாடின.

இதில் 20 - 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் பெரிய குருவம்பட்டி திருச்சி அணிக்கும் கற்பகம் பல்கலை அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் 35க்கு 14 என்ற புள்ளி அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை அணி வாதிரிப்பட்டி புதுக்கோட்டை அணியுடன் மோதியது. இதில் கற்பகம் பல்கலை அணி அபாரமாக விளையாடி 54 -21 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி வாகை சூடியது.



இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் முனைவர் பழனி சுவாமி, உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர். சுதாகர், பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter