தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழகம் சார்பில் விளையாடி முதல் பரிசை வென்ற பொள்ளாச்சி மாணவர்களுக்கு பொது மக்கள் பாராட்டு.!!

கோவை: காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழகம் சார்பில் விளையாடி முதல் பரிசை வென்ற பொள்ளாச்சி மாணவர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழகம் சார்பில் விளையாடி முதல் பரிசை வென்ற பொள்ளாச்சி மாணவர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஜம்மு யுனிவர்சிட்டி, யூத் ஸ்போட்ஸ் டெவலப்மென்ட், கபடி பெடரேஷன் சார்பில், காஷ்மீரில் கடந்த 8, 9 தேதிகளில் தேசிய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.

இதில் மகாராஷ்டிரா, மணிப்பூர், மத்தியபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 9 மேற்பட்ட கபடி அணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

நாக் -அவுட் முறையில், இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழக அணிக்காகக் கலந்து கொண்டனர்.

17 வயது பிரிவில் விளையாடிய மாணவர்கள், இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஹரியானா அணியுடன் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஹரியானா 21 புள்ளிகள் எடுத்தது, தமிழக அணி 28 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.



இந்நிலையில், இன்று ஊர் திரும்பிய மாணவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், பொதுமக்கள் கபடி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்திற்காகக் காஷ்மீரில் விளையாடி வெற்றி பெற்றது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும். தொடர்ந்து நேபாளத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளதாகவும் பயிற்சியாளர் விக்னேஷ் தெரிவித்தார்.

Newsletter