மாநில அளவிலான கால்பந்து போட்டி: பொள்ளாச்சி கால்பந்து அணி முதல் பரிசை தட்டிச்சென்றது..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பொள்ளாச்சி கால்பந்து அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பொள்ளாச்சி கால்பந்து அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக பொள்ளாச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பொள்ளாச்சி கால்பந்து சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கால்பந்து போட்டி பொள்ளாச்சியில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதில் சென்னை,கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றனர்.

நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சென்னை ஜே பி ஆர் கல்லூரி அணியும், பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணியும் தகுதி பெற்றது. அதன், இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற, இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை பொள்ளாச்சி கால்பந்து கிளப் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதல் பரிசு பெற்ற பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற சென்னை ஜே பி ஆர் கல்லூரி அணிக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையும் கோப்பைகளையும் வழங்கினார்.

Newsletter